×

கோவையில் முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் தாமாக வந்து போலீசில் சரண்

கோவை: கோவையில் முபின் காரில் சிலிண்டர் ஏற்றிய 3 பேரும் அவர்களது தாயார் கூறியதால் தாமாக போலீசில் சரணடைந்துள்ளனர். கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததில் ஜமேஷா மூப்பின் என்பவர் நிகழ்விடத்திலேயே உயிரிழந்துள்ளார். முபின் வீட்டருகே பதிவாகி இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்ததில் 3 பேர் சிலிண்டரை ஏற்றும் காட்சி பதிவாகியிருந்தது.

சகோதரர்கள் ஃபிரோஸ், நவாஸ் மற்றும் அண்டை வீட்டுக்காரரான முகமது ரியாஸ் ஆகியோர் என்பது தெரியவந்தது.ஃபிரோஸ் மற்றும் நவாஸின் தாயாரான மைமுனா பேகம்தான் தன் மகன்களையும் ரியாஸையும் சரணடைய கூறி இருக்கிறார் தாய் கூறியதை அடுத்து 3 பெரும் தமிழ்நாடு காவல்துறையினர் உளவு பிரிவை சேர்ந்த உயர் அதிகாரி முன் தாமாக சரணடைந்துள்ளார்.

கோவை கார் சிலிண்டர் வெடிப்பு தொடர்பாக போலீசில் சரணடைந்த 3 பேருக்கு முபினின் சாதி பற்றி தெரியாது என தாயார் தகவல் அளித்துள்ளார். தாயார் மைமுனா  பேகம் கூறித்தான் ஃபிரோஸ், நவாஸ், முகமது ரியாஸ் 3 பேரும் உளவுப்பிரிவு உயர் அதிகாரிகள் முன் சரணடைந்தனர். முபினின் சாதித்திட்டத்தில் 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக உறுதிப்படுத்தப்படவில்லை என கோவை ஆணையர் தகவல் அளித்துள்ளார். எனினும் கைது செய்யப்பட்ட 6 பேர் மீதும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது என்று கோவை காவல் ஆணையர் தெரிவித்துள்ளார்.

ஃபிரோஸ், நவாஸ், முகமது ரியாஸ் ஆகியோருக்கு முபினின் சதிச் செயலில் நேரடி தொடர்பு இல்லை என்று காவல்துறையினர் தகவல் கூறியுள்ளார். அதே நேரத்தில் கைதான முகமது அசாரூதின், கே.அஃப்சார்கான் 2 பேருக்கு நேரடி தொடர்பு இருக்கலாம் என்று போலீஸ் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.


Tags : Mubin , Coimbatore, Mubin, cylinder, 3 people, Dhamaga, police, Saran
× RELATED கோவை கார் குண்டு வெடிப்பு வழக்கில் 4...